மூன்றுக்கும் ஒரே பயணச்சீட்டு.. முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை..!

சென்னையில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.17-ம் தேதி) காலை 11 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமம், மாநகர போக்குவரத்துக்கழகம், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

கூட்டத்தில், மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

போக்குவரத்து நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் கடந்த 2010-ம் ஆண்டு போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு போக்குவரத்துத்துறை பிரச்னைகளை சரிசெய்து வருகிறது. இந்த குழு மூலம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 5,904 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கி திட்டமிடல் செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.