தமிழகம் முழுவதும் 1080 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 தேர்வு..!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற்றது.

18 துணை ஆட்சியர்கள், 26 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வு 1080 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதில், 45,939 பேர் தேர்வு எழுதினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.