புதுடில்லி : புதுடில்லியில், நேற்று காற்று மாசின் அளவு மிகவும் மோசமான நிலையை எட்டியதால், அத்தியாவசியம் இல்லாத கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் புதுடில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரி காற்றின் தரம் அளவு மிகவும் மோசமாகி,407 புள்ளியை எட்டியது.எனவே, காற்றின் தரம் குறித்து மதிப்பிட, மத்திய காற்று தரக் குழு நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
இதில், காற்றின் தரம் மேலும் மோசமடைந்து விடாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அத்தியாவசியம் இல்லாத கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement