சீன வீரர்களை அடித்து நொறுக்கிய இந்திய ராணுவம்..பலர் படுகாயம்..ஒன்றிய அரசு மறைத்தது ஏன்?

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. ஜவஹர்லால்
நேரு
பிரதமராக இருந்த காலகட்டத்தில் கடந்த 1962ம் ஆண்டு சீன போர் வெடித்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்து. இந்த தோல்வி குறித்த சிந்தனையிலேயே பிரதமர் நேரு உடல் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கல்வானில் சீன ராணுவ வீரர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது. ஆனால் நான்கு ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீனா உறுதி செய்தது. அனால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலிய நாளிதழில் வெளியிட்ட செய்தியின்படி கல்வானில் நான்கு சீன வீரர்கள் அல்ல, சீனாவுக்கு அதை விட பல மடங்கு இழப்பாக குறைந்தது 38 வீரர்கள் வரை இறந்ததாகக் கூறியிருந்தது.

இப்படியாக இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கல்வான் மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையேயும் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் எந்த வித உடன்பாடும் எட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா தனது கட்டுமானங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. அதற்கு உதராணமாக செயற்கைகோள் புகைப்படங்களும் வெளியாகின.

அதில் சீன அரசு குடியிருப்புகளை கட்டியிருந்தது அம்பலமானது. ஆனால் அதற்கு ஒன்றிய அரசு சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் அருணாச்சல் பிரதேசத்தி இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே மறுபடியும் மோதல் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் கடந்த டிசம்பர் 9ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி தலைமையில் கூட்டணியா? டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.

பாலுறவுக்கு சம்மதிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – டி.ஒய்.சந்திரசூட்

இந்த மோதலுக்குப் பிறகு பரஸ்பரம் அமைதியை நிலைநாட்ட, அப்பகுதியின் தளபதி சீனாவில் உள்ள எல்லை கட்டளை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களை விட சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் காயம் அடைந்ததாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோதலை நடந்த போதே ஒன்றிய அரசு கூறாதது ஏன்? என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.