பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார் .

காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.

தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.

தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி தயாரின் மறைவு குறித்து தெரிவித்திருந்தார்.

அகமதாபாத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று காலை (30) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 100.என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.