காஷ்மீரில் 2022-ல் 56 பாகிஸ்தானியர் உட்பட 186 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் நேற்று கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 186 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 56 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 159 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளோம். மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சிறப்பான பணியைச் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்குவதற்கான சரியான பாதையில் போலீஸாரும், இதர பாதுகாப்புப் படையினரும் சென்று கொண்டிருக்கினறனர்.

146 பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களை இந்த ஆண்டில் அழித்துள்ளோம். இந்த வகை குழுக்கள் ஒவ்வொன்றிலும் 4 முதல் 5 தீவிரவாதிகள் இருப்பர். இந்த ஆண்டில் சுமார் 100 இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதக் குழுக்களில் இணைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இது மிகக் குறைந்த அளவாகும். இதன்மூலம் இப்பகுதியில் தீவிரவாதம் மெல்ல மெல்ல வேரறுக்கப்பட்டு வருவது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.