விருத்தாசலம் அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து… 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து வாய்க்காலில் தலைகீக கவிழ்ந்ததில் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

சேப்பாக்கம் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த கார், எதிரில் வேகமாக வந்த ஆம்னி கார் மீது மோதாமல் இருப்பதற்காக சாலையோரம் ஒதுங்கியபோது வாய்க்காலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

தலைகீழாக கவிழ்ந்த பேருந்தில் சிக்கிய பயணிகளை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உடடினயாக மீட்டுள்ளனர். தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.