இந்தியா முழுவதும் 2022ல் பாஸ்டேக் மூலம் நடந்த வசூல் 46 விழுக்காடு அதிகம் எனத் தகவல்

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பாஸ்டேக் மூலம் வாகனங்களிடம் நடத்தப்பட்ட வசூல் 46 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு வசூலான தொகை 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 134 கோடி ரூபாய் வசூலானதாகவும், அதிகபட்சமாக டிசம்பர் 24ம் தேதி 144 கோடியே 19 லட்சம் ரூபாய் வசூலானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.