குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற உத்தராகண்ட் மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு

புதுடெல்லி: குடியரசு தின விழாவை முன் னிட்டு, டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி அணிவகுப்பு நடந்தது. இதில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் பல மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்தி கள் இடம்பெற்றன.

இதில் உத்தரா கண்ட் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த அலங்கார ஊர்தியில் உத்தராகண்ட் மாநிலத்தின் வன விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் கார்பட் தேசிய பூங்காவின் கலைமான், கஸ்தூரி மான் இனங்கள், தேசிய பறவை மயில், கோரல் பறவை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் பின் பகுதியில் ஜகேஷ்வர் தாம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பழங்கால கோயில்கள் இடம் பெற்றிருந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.