பிரதமர் மோடியைப் பற்றிய பிபிசி படத்தின் மீதான தடையை நீக்கக்கோரும் மனு.. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

பிரதமர் மோடியைப் பற்றிய சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசியின் ஆவணப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது.

டிவிட்டர் , யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் இந்தப் படத்தைப் பகிரவும் அரசு தடை விதித்துள்ளது.

காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் இப்படத்தைத் தடை செய்வது சட்டவிரோதமானது என்று தங்கள் மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர். அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று பரிசீலிக்க உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.