Samsung Smartwatch வாங்கியதில் எந்த பயனும் இல்லை! Nothing Phone தலைவர் Carl pei Tweet!

உலகளவில் ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு அதிகமாக இருக்கும் இந்த காலத்தில் Nothing Phone நிறுவன தலைவர் கார்ல் பெய் வாங்கியதில் தனக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இதை மக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்று ட்விட்டர் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு உலகின் முதல் ஸ்மார்ட் வாட்ச் LG நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு பல நிறுவனங்கள் தொடர்ந்து ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்து தற்போது உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உள்ளது.

இதில் தலைசிறந்த ஸ்மார்ட்வாட்ச் நிறுவனமாக ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் உள்ளது. இந்த வாட்ச் மற்ற வாட்ச்களை விட கூடுதலான துல்லியமான விவரங்களை காட்டும். இதற்கு அடுத்தபடியாக இருப்பது
சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்
ஆகும்.

ஸ்மார்ட்வாட்ச் வாங்கியதில் பயன் இல்லை என்று தெரிவிக்கும் நீங்கள் ஏன் ஸ்மார்ட்வாட்ச் வாங்கினீர்கள்? என்று மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவித்த அவர் “இந்த செக்மென்ட் குறித்து தெரிந்துகொள்வதற்கே வாட்சை வாங்கியதாக” அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே Nothing நிறுவனம்
Nothing Phone மற்றும் Nothing Earbuds
போன்ற கருவிகளை ஏற்கனவே விற்பனையை செய்கிறது. பலர் ஸ்மார்ட் வாட்ச் வைத்து நீங்கள் உங்களின் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விவரங்களை கணிக்கமுடியும் என்றும் அது இல்லாமல் மியூசிக் கண்ட்ரோல், NFC போன்ற வசதிகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

விரைவில் Nothing நிறுவனம் Nothing Smartwatch அறிமுகம் செய்யப்போகிறது என்றும் அதில் Samsung வாட்ச்களில் இருக்கும் அதே Wear OS இடடம்பெறும் என்பதாலும் கார்ல் பெய் ஆண்ட்ராய்டு உலகின் தலைசிறந்த Samsung Galaxy Watch 5 pro பயன்படுத்திவருவதாக கூறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.