Samsung A54, A34 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 16 அன்று வெளியாகும்!

இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் வரும் மார்ச் 16 அன்று அதன் புதிய Galaxy A34 மற்றும் A54 என இரு ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. இந்த் ஸ்மார்ட்போன்கள் வெளியீடு குறித்து சாம்சங் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன்கள் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய Galaxy A சீரிஸ் போன்கள் முழு IP67 பாதுகாப்பு அம்சத்துடன் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் 1 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை தாங்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இதன் பாதுகாப்பிற்காக Corning Gorilla Glass டிஸ்பிலே வசதி, கிளாஸ் பேக் போன்ற வசதிகள் உள்ளன.

கேமரா வசதியாக 50MP மெயின் கேமரா, 12MP அல்ட்ரா வைட் கேமரா, 5MP மேக்ரோ கேமரா என மொத்தமாக 3 Camera உள்ள ட்ரிபிள் கேமரா வசதி இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போனில் முன்பக்கம் செல்பி கேமரா அம்சமாக 32MP வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் நமக்கு 4 ஆண்டுகள் OS அப்டேட் மற்றும் 5 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் Android 13 OS சார்ந்து உருவாக்கப்பட்ட Samsung One UI உள்ளது. இதில் 6.4 இன்ச் AMOLED ஸ்க்ரீன், 5nm Exynos 1380 சிப் வசதி, 5000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றிய மேலும் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.