Airtel 5G: புதிய Unlimited Data வசதியை அறிமுகம் செய்த ஏர்டெல்! எப்படி பெறுவது?

இந்தியாவில் முன்னனி டெலிகாம் சேவை நிறுவனமான Airtel அதன் PostPaid பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் 5G சேவையின் உண்மையான திறனை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்த இந்த புதிய திட்டத்தை ஏர்டெல் செயல்படுத்தியுள்ளது.

இதனால் இனி Airtel 5G Plus மூலமாக அன்லிமிடெட் 5G டேட்டா பயன்படுத்தலாம். தற்போது ஏர்டெல் 5G இந்தியாவில் 270 நகரங்களில் கிடைக்கிறது. இதே நேரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5G சேவையை 365 நகரங்களில் அறிமுகம் செய்துவிட்டது. மேலும் வரும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் ஜியோ 5G இந்தியா முழுவதும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

ஏர்டெல் பொறுத்தவரை மார்ச் 2024 மாத இறுதிக்குள் 5G சேவைகளை இந்தியா முழுவதும் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதேபோல ஜியோ நிறுவனம் அதன் ‘Jio 5G Welcome Offer’ மூலமாக அன்லிமிடெட் 5G டேட்டா வழங்குகிறது. இதை பயன்படுத்த ஜியோ பயனர்கள் 239 ரூபாய் மேல் ரீசார்ஜ் செய்திருக்கவேண்டும்.

எப்படி பெறுவது?

இதை நாம் பயன்படுத்த நாம் Airtel Thanks App திறந்து அதில் ‘Unlimited 5G Data’ பெறவேண்டும். ஆனால் இதற்கு நம்மிடம் 5G ஸ்மாட்போன்கள் மற்றும் நாம் இருக்கும் இடத்தில் Airtel 5G சேவை இருக்கவேண்டும். ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தற்போதைய திட்டம் முடியும் வரை அன்லிமிடெட் 5G டேட்டா பயன்படுத்தமுடியும்.

ஏர்டெல் பொறுத்தவரை ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 5G சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த இரு நிறுவனங்களை தவிர்த்து BSNL மற்றும் Vi ஆகிய நிறுவனங்கள் டெலிகாம் சேவை வழங்கினாலும் இன்னும் அவை 5G சேவையை அறிமுகம் செய்யவில்லை.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.