Dhanush, Aishwarya Rajinikanth: தனுஷ், ஐஸ்வர்யா பற்றி குட் நியூஸ் சொன்ன பயில்வான்: ரசிகர்கள் நிம்மதி

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிவை அறிவித்தார்கள். பிரிந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் இதுவரை விவாகரத்து கோரவில்லை. இருவருக்குமே மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லையாம். அதனால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்று கூறப்பட்டது.

Dhanush: ஐஸ்வர்யாவுக்கு துரோகம் செய்த தனுஷ்?: யோவ் டுபாக்கூர், கையில கெடச்ச, அவ்ளோ தானு விளாசும் ரசிகாஸ்

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், தனுஷும் சென்னையில் இருக்கும் சிவில் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர் என பாலிவுட் விமர்சகரான உமைர் சந்து ட்வீட் செய்தார். அதை ரசிகர்கள் நம்பாவிட்டாலும், ஒரு வேளை நடந்திருக்குமோ என பயந்தார்கள்.

இந்நிலையில் தான் பேட்டி ஒன்றில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து கோரி விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை கேட்டு தனுஷ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் நிச்சயம் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Dhanush, Meena: தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம், பாடி டிமான்ட் இருக்கும்: பயில்வான் ரங்கநாதனை விளாசும் ரசிகர்கள்

இதற்கிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை விளாசவும் செய்கிறார்கள். தனுஷுக்கும், மீனாவுக்கும் திருமணம் என்று பயில்வான் சொன்னதை கேட்டு தான் ரசிகர்கள் கோபம் அடைந்து திட்டுகிறார்கள்.

ஐஸ்வர்யா பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கிறார். அவர் இசையமைக்கும் இடத்திற்கு அடிக்கடி செல்கிறார். இது குறித்து அறிந்த ரஜினியோ, அனிருத்துடன் தங்கக் கூடாது என மகளை எச்சரித்துள்ளார்.

பிரபுதேவாவுடனும் நெருக்கமாக இருக்கிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார். தொடை தெரியும் வகையில் உடை அணிந்து புகைப்படம் வெளியிடுகிறார். மகன்களுக்காக அவர் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் கூறியதை பார்த்த ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ரசிகர்கள் அவரை விளாசுகிறார்கள். அண்ணன், தம்பியாக யாருடனும் ஐஸ்வர்யா பழகவே கூடாதா?. அனிருத் அவருக்கு தம்பி, பிரபுதேவா கூடப் பிறக்காத அண்ணன். அவ்வளவு தான்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும்போது அப்படித் தான் உடை அணிய முடியும். அவர் மற்றவர்களை இன்ஸ்பையர் பண்ண தன் ஒர்க்அவுட் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதை தவறாக பேசக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மீனா ரசிகர்களும் பயில்வான் ரங்கநாதனை திட்டுகிறார்கள். கணவரை இழந்து வாடும் ஒரு நடிகையை பற்றி இப்படி பேசலாமா?. அவரே மகள் நைனிகாவுக்காக தைரியமாக இருக்க முயற்சி செய்து வருகிறார். தற்போது தான் சிரிக்கத் துவங்கியிருக்கிறார். இந்நிலையில் இது போன்று பேசுவது மிகவும் தவறு என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.