குற்றவாளி குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்..!புடினின் மரியுபோல் பயணத்திற்கு உக்ரைன் பதிலடி


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்டதை அடுத்து, ”குற்றவாளி எப்போதும் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்” என்று உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறியுள்ளார்.


மரியுபோலை பார்வையிட்ட புடின்

ரஷ்யா நடத்தி வரும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், உக்ரைனில் இருந்து சட்ட விரோதமாக குழந்தைகளை நாடு கடத்தியதற்கு பொறுப்பேற்று, ரஷ்ய ஜனாதிபதி புடினை கைது செய்ய கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி புடின் நேற்றிரவு உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான மரியுபோல் நகரை பார்வையிட்டார்.

குற்றவாளி குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்..!புடினின் மரியுபோல் பயணத்திற்கு உக்ரைன் பதிலடி | Putin Sudden Visit Mariyupol Ukraine Adviser Comme

ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த புடின், அங்கிருந்த கலை பாடசாலை, குழந்தைகள் மையம் மற்றும் Nevsky microdistrictயில் வசிப்பவர்களையும் சந்தித்தார்.

 ”குற்றவாளி குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்”

 இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஷ்ய ஜனாதிபதி புடின் பார்வையிட்டதை குறிப்பிட்டு, ”குற்றவாளி எப்போதும் குற்றம் நடந்த இடத்திற்கு திரும்புவான்” என உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யா அதன் எல்லைகளை தாண்டியதால், நாகரீக உலகம் “போர் இயக்குனரை” (விளாடிமிர் புடினை) கைது செய்வதாக அறிவிக்கும் போது, ஆயிரக்கணக்கான மரியுபோல் குடும்பங்களை கொலை செய்த கொலைகாரன் நகரின் இடிபாடுகளையும் கல்லறைகளையும் ரசிக்க வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

 சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் மாஸ்கோ சுற்றுப்பயணம் வரும் வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், புடினின் இந்த பயணம் வந்தது, மேற்கு நாடுகளுடனான மோதலில் புடினுக்கு இது ஒரு பெரிய இராஜதந்திர ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குற்றவாளி குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்..!புடினின் மரியுபோல் பயணத்திற்கு உக்ரைன் பதிலடி | Putin Sudden Visit Mariyupol Ukraine Adviser Comme



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.