கிருஷ்ணராஜபுரா- ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் தடத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பெங்களூரு மெட்ரோவில் கிருஷ்ணராஜபுரா-ஒயிட்பீல்டு இடையேயான புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்று மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைக்கிறார்.

பின்னர் கிருஷ்ணராஜபுரா- ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, தாவணகெரேவுக்கு செல்லும் பிரதமர் மோடி, பாரதிய ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவிற்கு பிரதமர் மோடி வருவது இது 7-வது முறையாகும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.