எடப்பாடிக்கு காத்திருக்கும் அடுத்த சவால்… சிங்கிள் டிஜிட் கிடைச்சாலும் சாதனை தான்!

அதிமுகவில் இரட்டை தலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் நாற்காலியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி,

இடையில் சுமார் 8 மாத காலம் நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்று வந்தது. இனியும் மோதல் போக்கு தொடரும் என்று கருதினாலும் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக

தேர்வு செய்யப்பட்டு விட்டார்.

2024 மக்களவை தேர்தல்

இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் முன்னெடுப்புகள் பெரிதாக எடுபட வாய்ப்புகள் இல்லை. கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் பெரிய சவாலாக 2024 மக்களவை தேர்தல் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சட்டத்தின் முன்பு சண்டையிட்டு கட்சியின் தலைவர் பதவியை பிடித்து விடலாம். அதை நிலையாக பிடித்து கொள்ள மக்கள் மன்றத்தின் ஆதரவு தேவை.

தேர்தல் முடிவுகள்

அதற்கு தேர்தல் முடிவுகள் தான் பதில் சொல்ல வேண்டும். இந்நிலையில் இன்னும் ஓராண்டில் வரவுள்ள மக்களவை தேர்தலில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இல்லையெனில் இவரது தலைமையின் கீழ் கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்படக்கூடும். எனவே சரியான கூட்டணி மற்றும் வெற்றிக்கான வியூகம் வகுத்து செயல்பட வேண்டியுள்ளது.

2019 தேர்தல் பிளாஷ்பேக்

கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் இருந்தது. ஆனால் 39 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் தென் மண்டலத்தில் தேனி மக்களவை தொகுதி. இருப்பினும் மிகப்பெரிய தோல்வியாகவே அமைந்தது. அப்போது நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

தொடர் தோல்விகள்

அதன்பிறகு 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என தோல்வி முகமாகவே அதிமுக தொடர்ந்து வந்துள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே பொறுப்பு. தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி விட்டு ஒற்றை தலைமை என்ற இடத்தை எடப்பாடி பழனிசாமி பிடித்துள்ளார்.

ஒற்றை தலைமை

இனிமேல் கட்சியின் வெற்றி, தோல்விகளுக்கு இவரே பொறுப்பாவார். அப்படி பார்க்கையில் 2024 மக்களவை தேர்தல் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு மிக மிக முக்கியமானது. மக்கள் மன்றத்தில் தனக்கான செல்வாக்கு என்னவென்பதை நிரூபிக்கும் அக்னி பரீட்சை என்று கூட சொல்லலாம். ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டத்தில் தோல்வி அடைந்து தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்தால் அரசியல் களம் புதிய திசையை நோக்கி பயணிக்கும்.

ஓபிஎஸ் புதிய கட்சி

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்,

ஆகியோர் ஒன்று சேர்ந்தால் தென் மாவட்ட செல்வாக்கு எடப்பாடிக்கு சறுக்க வாய்ப்புள்ளது. இவருடன் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் ஒன்றிணைந்தால் அதிமுகவின் வாக்கு வங்கி மேலும் அடிபடும். அப்போது ஒரே ஒரு தொகுதியில் வென்றால் கூட சாதனை தான் எனக் கூறுகின்றனர்.

குறிப்பாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பியாக இருக்கும் தேனி தொகுதியையும் எடப்பாடி கைப்பற்ற வேண்டும். அப்போது தான் இவரது பக்கம் தொண்டர்களும், மக்களும் இருப்பதாக அர்த்தம். கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலை ஒப்பிடுகையில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 3.31ல் இருந்து 1.37ஆக பெரிய சரிவை சந்தித்தது.

வாக்கு சதவீதம்

இதேபோல் தான் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால் வாக்கு வங்கி சதவீதம் 40.77ல் 33.29ஆக குறைந்தது. இவற்றை எந்த அளவிற்கு உயர்த்தி வெற்றிக் கனி பறித்து காட்டுகிறாரோ, அப்போது தான் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உண்மையான வெற்றியை பெறுவார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.