கைவிடப்பட்டது இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (28) நடைபெறயிருந்த நிலையில், மழையினால் இப்போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனினும் இத்தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் 31 ஆம் திகதி 6.30 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.