இருவரை கொன்ற புலி சிக்கியது| The tiger was trapped after killing two people

சூரஜ்புர், சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்புர் மாவட்டத்தில் உள்ள கலமஞ்சன் என்ற கிராமத்திற்குள் புகுந்த புலி, நேற்று முன்தினம் இரண்டு பேரை கொன்றது.

மேலும், புலி தாக்கியதில் அக்கிராம மக்கள் சிலர் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், புலியை உடனடி யாக பிடிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை, கும்கி யானை உதவியுடன் வனத் துறை அதிகாரிகள் ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின், புலியை பிடித்தனர்.

இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இரு கிராமத்தினரை கொன்று சிலரை காயப்படுத்திய 6 வயது பெண் புலி பிடிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்பட்டது. இது, ராய்ப்பூரில் உள்ள ஜங்கிள் சபாரி உயிரியல் பூங்காவில் அடைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.