தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்- கடற்தொழில் அமைச்சர்

யாழ். வடமராட்சியில் இருந்து தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது செய்யக்கூடியதான சாத்தியக்கூறு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் (29) மாலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும் தீவுப் பகுதியில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை சாவடியை பலப்படுத்தி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்வதன் மூலம் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்ணனதக்கது .

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.