Aishwarya Rajinikanth: மொத்தம் 200 பவுன் நகைய காணோம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
வீட்டில் திருட்டு போன நகைகள் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போயுள்ளதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. ​ தொடரும் துரோகங்கள்.. அசராத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!​
பணிப்பெண் ஈஸ்வரிஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், 6 மாதங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்ற ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை பார்த்து வந்த டிரைவர் வெங்கடேசனுடன் இணைந்து ஈஸ்வரி நகைகளை திருடியது தெரியவந்தது. சந்தேகம் வராமல் இருக்க கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார் ஈஸ்வரி. Pathu Thala Review: காலா பட ரஜினி போல… சிம்புவின் பத்துதல படத்தை இன்ச் பை இன்சாக விமர்சித்த பயில்வான்!​
எவ்வளவு நகைகள்?மேலும் திருடிய நகைகளை ஈஸ்வரியும் வெங்கடேசனும் சேர்ந்து மயிலாப்பூரில் உள்ள நகைக் கடையில் விற்றதும் தெரியவந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 100 பவுன் நகைகள் முதலில் சிக்கின. ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்து இருந்ததைவிட கூடுதலாக நகைகள் கிடைத்ததால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த நகைகள் எவ்வளவு? காணாமல் போனது எவ்வளவு என ஐஸ்வர்யாவிடம் விளக்கம் கேட்டனர் போலீசார்.
​ Sarath Babu: திடீர் உடல் நலக்குறைவு… நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி!​
புதிய புகார்இதையடுத்து தனது தங்கையின் திருமணத்தில் அணிந்திருந்த நகைகளை அடையாளம் காட்ட திருமண போட்டோ ஆல்பத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார் ஐஸ்வர்யா. மேலும் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எவ்வளவு? என்பது குறித்து முழுமையாக கணக்கு பார்த்து தெரிவிக்குமாறு ஐஸ்வர்யாவிடம் கேட்டனர் போலீசார். இதையடுத்து வீட்டில் இருந்த மொத்த நகைகளையும் ஆராய்ந்த ஐஸ்வர்யா புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் 200 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பதாக கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
​ Pathu Thala Review: சிம்புவின் பத்து தல படம் எப்படி? விமர்சகர்களின் அதிரடி விமர்சனம்!​
சிறையில் அடைப்புஇதையடுத்து புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர் போலீசார். ஐஸ்வர்யாவின் இரண்டாவது புகாரை தொடர்ந்தே போலீசார் ஈஸ்வரி மற்றும் ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் 45 முதல் 50 பவுன் நகைகள் ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. டிரைவர் வெங்கடேசனிடமிருந்து ரூ.45 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 2 நாள் காவலுக்கு பிறகு பணிப்பெண் ஈஸ்வரியும் வெங்கடேசனும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
​ Pandian Stores: ‘6 மாசம் என் கூட’… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையிடம் டீல் பேசிய இயக்குநர்!​
ஐஸ்வர்யாவின் பினாமிஈஸ்வரி, போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் ஐஸ்வர்யா கொடுத்த சம்பளம் பத்தாததால் வசதியாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு நகைகளை திருடியதாக தெரிவித்துள்ளார் ஈஸ்வரி. ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கர் இருக்கும் இடமும் அதற்கான சாவி இருக்கும் இடமும் தெரிந்த பிறகுதான் நகைகளை திருட திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார் ஈஸ்வரி. ஐஸ்வர்யா வீட்டில் திருடிய நகைகளை வைத்தே ஈஸ்வரி சோழிங்க நல்லூரில் சொகுசு வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கியிருப்பதும், திருடியதை கணவரிடமே மறைத்து, தன்னை ஐஸ்வர்யாவின் பினாமி என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
​ Gautham Karthik: என் பொண்டாட்டி குண்டா இருந்தா உங்களுக்கு என்ன? கடுப்பான கவுதம் கார்த்திக்!​
Aishwarya Rajinikanth

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.