ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு: அண்ணாமலை புகார் எதிரொலி!

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப்ரல் 24) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்ணாமலை வெளியிட்ட பட்டியல்: துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடைபெறுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது சமீபத்தில் புகார் தெரிவித்த நிலையில் அந்நிறுவனம் அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.