ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்


பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

46 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை

ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் | Public Utilities Commission Sri Lanka Janakka

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று(24.05.2023) காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இதனை சமர்பித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.