வயலில் உருண்டு புரண்டு தாக்கிக்கொண்ட ஆசிரியைகள்.. இதுக்கெல்லாமா சண்டை..!

பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியையை அப்பள்ளியின் இரண்டு ஆசிரியைகள் சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் காந்தி குமாரி. இவருக்கும் அனிதா குமாரி ஆசிரியைக்கும் வகுப்பறையின் ஜன்னலை மூடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியை காந்தி குமார் அனிதாவை மாணவர்கள் மத்தியில் கண்டித்துள்ளார்.

இதனால் அனிதாவுக்கு அவமானமாக இருந்துள்ளது. இதனை அடுத்து தலைமை ஆசிரியை காந்தி குமார் வகுப்பறையில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஆசிரியை அனிதா செருப்பை கழட்டி காந்தி குமாரியை தாக்கியுள்ளார். இதனால் இருவரும் மாறி மாறி அடித்துக்கொண்டனர்.

இதை கண்ட மற்றொரு ஆசிரியையும் சேர்ந்து தலைமை ஆசிரியையை தாக்கியுள்ளார். மூன்று பேரும் பள்ளிக்கு அருகே இருந்த வயலில் உருண்டு பிரண்டு தாக்கிக்கொள்வதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதில் தலைமை ஆசிரியை காந்தியை மட்டும் அனைவரும் டார்கெட் செய்வது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் வைரலாகி மாவட்ட கல்வித்துறை வரைக்கும் சென்றுள்ளது. இதுகுறித்து, கல்வி அலுவலர் நரேஷ் கூறுகையில், இரு ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு இது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியையும், பள்ளியின் பொறுப்பை பெற்றுள்ள தலைமை ஆசிரியையும் வயலில் உருண்டு புறண்டு அடித்துக்கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.