நாமக்கல் அருகே பரிதாபம்.! மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி…!

நாமக்கல் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பெரிய சோளக்கண்ணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(47). இவரது மனைவி செல்வி (42). இவர்களது மகன் யஸ்வந்த்(6). இந்நிலையில் மனோகரன் சேந்தமங்கலம் அருகே சிவபாரதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இதில் கணவன் மனைவி இரண்டு பேரும் நேற்று தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றனர். அப்பொழுது மனோகரன் மோட்டார் ஸ்வீட்ச்சை போட்டபோது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. 

இதைப்பார்த்த மனைவி செல்வி அதிர்ச்சி அடைந்து கணவரை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.