Thalapathy 68: தளபதி 68 கதையில் மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த வெங்கட் பிரபு..இது நம்ப லிஸ்டலே இல்லையே..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்

​கதைஇந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி வெங்கட் பிரபு ரஜினிக்காக எழுதிய கதையில் சில மாற்றங்களை செய்து தான் தளபதி 68 படத்தை உருவாக்க இருக்கின்றார் என பேசப்பட்டு வருகின்றது. மாநாடு படத்திற்கு பிறகு
வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும், அக்கதை பொலிட்டிகள் ஜானரில் இருப்பதால் ரஜினி வேண்டாம் என கூறிவிட்டதாகவும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அக்கதையில் விஜய்க்காக சில மாறுதல்களை செய்து தளபதியிடம் கூறி ஓகே வாங்கியுள்ளாராம் வெங்கட் பிரபு. சமீபகாலமாக விஜய் அரசியல் படங்களில் ஆர்வம் காட்டி வருவதால் இக்கதையில் நடிக்க எந்த வித மறுப்பும் இன்றி ஒப்புக்கொண்டுள்ளார் என ஒரு தகவல் வெளியாகிவுள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையா இல்லை வேறொரு ஜானரில் தளபதி 68 படத்தை உருவாக்கி ​வெங்கட் பிரபு ட்விஸ்ட் வைப்பாரா என்பது படம் வெளியான பின்னரே தான் தெரியவரும்.

​அடுத்தகட்டம்தற்போது தளபதி 68 படத்தின் திரைக்கதையை மிக தீவிரமாக உருவாக்கி வருகின்றார் வெங்கட் பிரபு. மறுபக்கம் விஜய் லியோ படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். எனவே லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் விஜய் வெங்கட் பிரபுவிடம் முழு கதையையும் கேட்பாராம். இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 68 படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக தெரிகின்றது. பூஜை முடிவடைந்த பிறகு ஜூலை மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

​போட்டிலியோ படத்திற்கு பிறகு விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றார் என தகவல்கள் வந்தன. மேலும் தயாரிப்பு நிறுவனத்தை சார்ந்தவர்களும் இந்த தகவலை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தினார். இதையடுத்து தளபதி 68 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கப்போகின்றார் என்றும் பேசப்பட்டது. மறுபக்கம் தளபதி 68 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அப்படத்தை அட்லீ இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இவ்வாறு தளபதி 68 படத்திற்காக கடுமையான போட்டிகள் நிலவி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வெங்கட் பிரபுவை தன் அடுத்த பட இயக்குனராக ஒப்பந்தம் செய்தார் தளபதி. மேலும் இப்படத்தை AGS நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து விஜய் இபபடத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்கியிருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன

​அறிவிப்புவிஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே லியோ படம் முடிந்த பிறகே அவரின் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதைப்போல தான் வாரிசு படம் வெளியான பின்னரே தான் லியோ படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் இம்முறை லியோ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் போதே தளபதி 68 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் தளபதி. இது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக இருக்கின்றது. பலரும் விஜய்க்கு லியோ படத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை தான் அப்படம் முடிவடையும் முன்னே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட காரணமாக அமைந்தது என தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். என்ன இருந்தாலும் தளபதி ரசிகர்களுக்கு தற்போது டபுள் கொண்டாட்டமாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.