கேரளாவில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் பலி

கேரள மாநிலம் கண்ணூரில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்தார்.

நௌஷாத்னு – சீஃபா தம்பதி பஹ்ரைனில் வேலை செய்து வரும் நிலையில், அவர்களது மகன் நிஹால் முழப்பிலங்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிஹால் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திடீரென காணாமல் போனதால் உறவினர்கள் அவனை  தேடியுள்ளனர்.

வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள புதர் பகுதியில் சிறுவனின் உடல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற உறவினர்கள் அது நிஹால்தான் என்று உறுதிப்படுத்தினர்.

தெருநாய்கள் கடித்து குதறி, சிறுவனை முட்புதருக்குள் இழுத்து சென்றதாக கூறப்படும் நிலையில், எடக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.