சுத்தம் செய்து கொண்டிருந்த போது கிணற்றுக்குள் புதைந்த 63 வயது நபர்.. பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்..!

கியூபாவின் ஹோல்கைன் நகரில், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் புதைந்த 63 வயது நபரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

பண்ணை தொழிலாளியான ஃபெர்னாண்டோ ஹெரெரா என்ற நபர், கிணற்றை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெய்த கனமழையில் நிலம் உறுதி தன்மையை இழந்து மண் உள்வாங்கியது.

இதில் ஹெரெரா மீது கல்லும் மண்ணும் விழுந்து மூடியது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்பு பணியையடுத்து ஃபெர்னாண்டோ ஹெரெரா பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.