மர்மமாக இறந்துகிடந்த இருவர்… ‘டாஸ்மாக் மதுவே காரணம்’ – குற்றம்சாட்டும் உறவினர்கள்!

மயிலாடுதுறை அருகே அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்ததே இருவர் உயிரிழந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மங்கை நல்லூர் கடை வீதியில் இரும்பு பட்டறை வைத்து நடத்திவந்த குத்தாலம் தாலுகா தத்தங்குடி பகுதியைச் சேர்ந்த பழனி குருநாதனுடன், அவரிடம் பணிபுரிந்து வந்த பூராசாமி ஆகிய இருவரும் நேற்று வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர்.

இதையறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், அவர்கள் மயங்கி கிடந்த பட்டறையில் ஒரு முழு குவாட்டர் பாட்டிலும், காலியான ஒரு குவாட்டர் பாட்டிலும் கிடந்துள்ளது.

தஞ்சையில் டாஸ்மாக் மதுஅருந்தி 2 பேர் உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள்,மயிலாடுதுறையில் டாஸ்மாக் மது குடித்ததால் தான் 2 பேர் இறந்தார்களா? அல்லது வேறு காரணமா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.