தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் "இடியுடன் கூடிய மழை" – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்ப சனலம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தது.

அந்த வகையில், அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி திருவள்ளுவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.