vijay: மாணவர்களை சந்தித்த அடுத்த நாளே விஜய் செய்த காரியம்..குவியும் பாராட்டுக்கள்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-

​விறுவிறுப்பாக செல்லும் லியோதற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் தான் ஒரு பாடல் காட்சியை படக்குழு மிகப்பிரம்மாண்டமாக படமாக்கியது. மொத்தம் ஒரு வாரம் இப்பாடல் படமாக்கப்பட்டதை அடுத்து தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்னும் பத்து நாட்களில் விஜய்யின் போர்ஷன் முடிந்துவிடும் என்றும், இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

​விஜய்யை பாராட்டும் ரசிகர்கள்லியோ படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் விஜய் நேரம் ஒதுக்கி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் விஜய். அதுமட்டுமல்லாமல் 12 மணி நேரத்திற்கு மேலாக அவர்களுடன் நேரம் செலவழித்தார் . மேலும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி கல்வி எந்தளவிற்கு வாழ்க்கைக்கு முக்கியம் என்பதையும் தளபதி உணர்த்தினார். இதைத்தொடர்ந்து விஜய்யின் இந்த செயலை பொது மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுபோல தொடர்ந்து விஜய் செய்து வந்தால் அவரின் அரசியல் பயணத்திற்கும் ஆதரவு அளிப்போம் என மக்கள் கூறி வருகின்றனர்

​பலமணி நேரமாகவிஜய் இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக நின்றுகொண்டு மாணவர்ளுடன் சிரித்து பேசி வந்தார். மேடையிலேயே எதுவும் சாப்பிடாமல் சிரித்த முகத்துடன் பல மணி நேரம் இருந்தார் விஜய். ஆனால் ஒரு கட்டத்தில் விஜய்யால் நிற்கமுடியாமல் ஒரு மேசையில் சாய்ந்துகொண்டு நின்றதை பார்த்து ரசிகர்கள் வருந்தினர். விஜய் நினைத்திருந்தால் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கலாம் , ஏன் சில மணி நேரத்திலேயே மற்றவர்களை பரிசுகளை வழங்க சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாம். ஆனால் இது எதுவும் செய்யாமல் மாணவர்களுடன் ஜாலியாக உரையாடி அவர்கள் அனைவர்க்கும் தன் கையால் பரிசு வழங்கியுள்ளார் விஜய். என்னதான் உடலில் சோர்வு ஏற்பட்டாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடன் இருந்த விஜய்யை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

​லியோவில் இணைந்த விஜய்மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இரவு 11 மணிவரை நடைபெற்றது. காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை விஜய் மேடையிலேயே நின்றுகொண்டு இருந்தார். என்னதான் உடல் சோர்வு அடைந்தாலும் அதனை அவர் வெளிகாட்டிக்கொள்ள வில்லை. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே விஜய் லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என தகவல் வந்துள்ளது. இரவு 11 மணி வரை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் அடுத்த நாளே லியோ படப்பிடிப்பில் இணைந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் விஜய் உழைப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.