பட வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார்: ரெஜினா கசான்ட்ரா திடுக் தகவல்

Regina Cassandra interview: பட வாய்ப்புகள் இல்லாதபோது தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசியிருக்கிறார் ரெஜினா கசான்ட்ரா.

​பட வாய்ப்பு​திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது பற்றி பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்த தயாரிப்பாளர் அழைத்தார், இயக்குநர் அழைத்தார் என சில பிரபல நடிகைகளே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ரெஜினா கசான்ட்ராவும் தனக்கு நடந்தது பற்றி வெளியே சொல்லியிருக்கிறார்.சிகரெட்​சிகரெட் வச்சி மட்டும் தான் ஸ்டைல் காட்டணுமா? அத மிஸ் யூஸ் பண்ணாதீங்க.!​​ரெஜினா​பேட்டி ஒன்றில் ரெஜினா கூறியதாவது, பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. நான் சிலரிடம் பட வாய்ப்பு கேட்டேன். அட்ஜஸ்ட் பண்ண ரெடியாக இருந்தால் பட வாய்ப்பு உடனே கிடைக்கும் என ஒருவர் கூறினார். அவர் எதை மனதில் வைத்து அப்படி கூறினார் என எனக்கு அப்பொழுது புரியவில்லை என்றார்.

​படுக்கை​ரெஜினா கசான்ட்ரா மேலும் கூறியதாவது, சம்பளத்தில் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்கிறார் போன்று என நினைத்தேன். அந்த நபர் கூறியதை என் மேனேஜரிடம் தெரிவித்தேன். அவர் தான் அந்த நபர் எதை எதிர்பார்த்து அப்படி பேசினார் என்பதை எனக்கு விளக்கினார். அப்பொழுது எனக்கு 20 வயது தான். அதன் பிறகு அப்படி யாரும் என்னிடம் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லவில்லை என்றார்.
​நயன்தாரா​பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தனக்கும் நடந்தது என லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவே பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஒரு பெரிய படத்தில் முக்கிய கதாபாத்திரம் தருகிறோம், அட்ஜஸ்ட் பண்ணுங்கள் என்றார்கள். நான் முடியாது என்று கூறிவிட்டேன். என் திறமைக்காக மட்டுமே பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

​புகார்​காதலி மோனிகாவை திருமணம் செய்து கொண்ட கவின்: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்மீடு இயக்கம் வேகம் எடுத்தபோது நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் பற்றி பேசினார்கள். பாடகி சின்மயியும் கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்தார். மேலும் சில பாலிவுட் நடிகர்களும் தங்களையும் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து அதிர வைத்தார்கள். இந்நிலையில் ரெஜினா தற்போது பேசியிருக்கிறார்.

​ரசிகர்கள்​ரெஜினா கசான்ட்ரா கூறியதை கேட்டவர்கள் தெரிவித்திருப்பதாவது, சினிமாவில் இப்படித் தான் ரெஜினா. நல்ல வேளை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டீர்கள். திறமையை மட்டும் நம்பியதால் தான் இன்று திரையுலகில் நிலைத்து நிற்கிறீர்கள். நீங்கள் திறமைசாலி. அதனால் இது போன்ற ஆட்களை கண்டுகொள்ள வேண்டாம் என்கிறார்கள்.
​கெரியர்​Jailer: 10 நாளில் ரூ. 500 கோடி வசூலித்த ஜெயிலர்: பாக்ஸ் ஆபீஸ் கிங் ரஜினி2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையானவர் தமிழ் பெண்ணான ரெஜினா கசான்ட்ரா. நன்றாக படித்த பெண்ணான அவர் சினிமா மீதான காதலில் நடிகையாகிவிட்டார். அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர் ரெஜினா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.