புதிதாக 72 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 548 ஆக உயர்ந்தது.

நேற்று கொரோனாவில் இருந்து 60 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 171 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 11 அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 1,452 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

நேற்று கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 925 ஆக உயர்ந்தது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.