புதுடெல்லி: ஆசிய கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கிறது. இதுவரை இந்த போட்டித்தொடரில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆசிய கோப்பை 2023 போட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. போட்டியைக் காண விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆவலும் கூடிக் கொண்டே செல்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் என இந்திய கிரிக்கெட்டர் உட்பட ஆசிய கோப்பையில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்களின் டாப் 5 லிஸ்ட் இது.
ஆசிய கோப்பை 2023 போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நேபாளம் அணிகள் மோதுகின்றன. பல ஆண்டுகளாக ஆசியக் கோப்பைப் போட்டியில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த பேட்டர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தியாவின் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் முதல் இலங்கையின் சனத் ஜெயசூர்யா என பலர் இடம் பெற்றுள்ளனர்.