அரசியல் லாபத்திற்காக கூட்டணி அமைக்கவில்லை.. இந்தியாவை காப்பாற்றவே கூட்டணி.. மு.க. ஸ்டாலின் பேச்சு

மும்பை:
“அரசியல் லாபத்திற்காக நாங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டோம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் இருந்து எப்படியாவது பாஜக ஆட்சியை அகற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கின்றன.

‘இந்தியா’ என்று இந்தக் கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 எதிர்க்கட்சிகள் இணைந்திருக்கும் இந்தக் கூட்டணியின் தலைவர்கள் மும்பையில் இன்று சந்தித்து பேசினர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஏற்கனவே பாட்னாவிலும், பெங்களூரிலும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசிய நிலையில், மூன்றாம் கட்டமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

ஐஏஎஸ் அதிகாரியே மிரட்டப்பட்டால்.. பொதுமக்கள் நிலைமையை யோசிச்சு பாருங்க.. ஜெயக்குமார் சுளீர்

மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சி எந்த அளவுக்கு சர்வாதிகாரப் போக்குடன் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் இந்த எதேச்சரிதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் ‘இந்தியா’ கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். இன்றைக்கு பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி எங்கு சென்று பேசினாலும் தனது 10 ஆண்டுகால ஆட்சியை பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் அதை பற்றி பேச ஒன்றும் இல்லை. 10 ஆண்டுகாலத்தில் ஒரு சாதனையையும் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்யவில்லை.

அதனால் அரசு நிகழ்ச்சியில் பேசினாலும், கட்சி நிகழ்ச்சியில் பேசினாலும் என்ன பேசுவதென்றே தெரியாமல் எங்களின் ‘இந்தியா’ கூட்டணியை பற்றிதான் பேசி வருகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும் ‘இந்தியா’ கூட்டணியை அவர் பிரபலப்படுத்தி வருகிறார். அந்த வகையில், எங்கள் கூட்டணிக்கு சிறந்த விளம்பர தூதுவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். எனவே ‘இந்தியா’ கூட்டணி சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடகாவுல சிங்கம் மாறி இருந்தாரு.. இங்க அசிங்கம் பண்ணிட்டு இருக்காரு.. அண்ணாமலையை தாக்கிய சீமான்

அரசியல் லாபத்திற்காகவோ, தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ இந்தக் கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். இந்தியாவை காப்பாற்றவும், இந்தியாவின் மதச்சார்பின்மையை காப்பாற்றவும், இந்தியாவின் மாண்பை காப்பற்றவும், இந்தியாவின் சமூக நீதியை காப்பாற்றவுமே நாங்கள் இணைந்திருக்கிறோம். மக்களுக்காக ஒரு பெரிய போர்க்களத்திற்கு நாங்கள் செல்லவிருக்கிறோம். அந்த போர்க்களத்தில் மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.