10,000 எஞ்சினியரிங் சீட்டா? அண்ணா பல்கலைக்கழகம் சர்ப்ரைஸ்… இதுல இப்படி ஒரு காரணம் இருக்காம்!

TNEA 2023 எனப்படும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. முதலில் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மானவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதையடுத்து மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்புகள் மீது ஆர்வம்ஆன்லைனில் மூன்று ரவுண்ட் கவுன்சிலிங்கின் முடிவில் கடந்த ஆண்டின் இதே கட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு 10,234 மாணவர்கள் அதிகமாக சீட்டை தேர்வு செய்திருக்கின்றனர். தமிழக பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1,60,780 சீட்கள் இருக்கின்றன. அதில் மூன்று ரவுண்ட்டுகள் முடிவில் 95,046 சீட்கள் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைஅரசு பள்ளிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 11,058 மாணவர்கள் சீட் எடுத்துள்ளனர். இதுவரை மொத்தமாக பொறியியல் பாடப்பிரிவில் சீட் எடுத்தவர்கள் எண்ணிக்கை 1,06,104. தற்போது காலியாக இருக்கும் சீட்கள் 54,676 ஆகும். பொறியியல் கல்லூரிகளில் சீட் காலியாக கிடக்கின்றன. மாணவர்கள் பொறியியல் படிப்பை அதிகம் விரும்புவதில்லை. இதன் மீதான மோகம் குறைந்து வருகிறது என்றெல்லாம் பேச்சு அடிபடுவதை பார்க்கலாம்.
என்ன காரணம்?ஆனால் நடப்பு கவுன்சிலிங்கின் கள நிலவரம் அதிகப்படியான மாணவர்கள் பொறியியல் சீட்டை எடுத்திருப்பதை காட்டுகிறது. இதற்கு காரணம் என்னவென்று வல்லுநர்கள் சிலரிடம் விசாரிக்கையில், Artificial Intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக காணப்படுகிறது. குறிப்பாக சாட் ஜிபிடி (Chat GPT) வந்த பிறகு ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்டு விட்டது என்று சொல்லலாம்.
சாட் ஜிபிடி வருகைஇந்த மோகம் மாணவர்கள் மத்தியில் அதிகமாகி விட்டது. எனவே அதுசார்ந்த பொறியியல் பாடப் பிரிவுகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல கணினி அறிவியல் (Computer Science) பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல், இசிஇ, சிவில், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட துறைகளின் மீதும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
​கல்லூரிகள் தேர்வுபாடப் பிரிவுகள் எல்லாம் ஓகே தான். எந்த கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. டியூசன் மற்றும் ஹாஸ்டல் கட்டணங்கள் தனியார் கல்லூரிகளில் அதிகமாக இருக்கின்றன. இதனால் முடிந்தவரை அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய விரும்புகின்றனர். இல்லையெனில் வீட்டிற்கு அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிகிறது. இந்த பொறியியல் கவுன்சிலிங் சில கல்லூரிகளுக்கு சிக்கலை உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
​அட்மிஷன் சிக்கல்அதற்கு காரணம் போதிய அட்மிஷன் கிடைக்கவில்லை. 10 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்தால் அந்த கல்லூரிகளை செயல்படுத்துவது மிகவும் கடினம். அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின் படி அந்த கல்லூரிகளை நடத்துவது சாத்தியமில்லை. எனவே அப்படி மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து வேறு கல்லூரிகளுக்கு மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் முடிவுகவுன்சிலிங் முடிந்த பின்னர், மிகவும் மோசமாக மாணவர் சேர்க்கை நடந்துள்ள கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த கல்லூரியை நடத்தலாமா, வேண்டாமா? அங்கீகாரம் தொடரலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யலாம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே திட்டத்தில் தான் அண்ணா பல்கலைக்கழகமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.