நைனிடால்உத்தரகண்டில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள பேட்லாட்டில் இருந்து, அம்ஜத் கிராமம் நோக்கி பஸ் ஒன்று நேற்று ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement