காந்தாரா இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் பட நாயகி

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் உருவாகி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் இருந்து வெளியான 'கேஜிஎப்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காந்தாரா திரைப்படத்தின் மூலம் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டியும் தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அடுத்ததாக அவர் 'காந்தாரா லெஜன்ட் ; சாப்டர் 1' என்கிற பெயரில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்த படம் காந்தாரா படத்தின் பிரீக்வல் அதாவது முன் கதையாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் நடிகை ருக்மணி வசந்த் இதில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இவர்தான் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது மட்டுமல்ல விஜய்சேதுபதியின் 51 வது படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.