தெலங்கானா வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெக்கொண்டா மண்டல் பகுதியில் ராஜஸ்தானைச் சேர்ந்த காலுராம் குர்பியா என்பவர் தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வருகிறார். சாலையோரத்தில் கடை நடத்தி வரும் இவர் பொதுவெளியில் சுயஇன்பத்தில் (masturbation) ஈடுபடுவதோடு, விந்துவை (semen) ஐஸ்க்ரிமீல் சேர்க்கும் திடுக்கிட வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஐஸ்க்ரீம் அல்லது ஃபலுடா உள்ள பாத்திரத்தில் விந்துவைச் சேர்ப்பது போல வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே கடும் எதிர்ப்புகளைப் பெற்றது. மக்கள் சாப்பிடும் உணவில் அருவருக்கத்தக்க வகையில் அவர் செய்த செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பலர் வலியுறுத்தி இருந்தனர். பலர் தெருக்கடை உணவுகளின் சுகாதாரம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்த தெலங்கானா போலீஸார் அந்த நபரைக் கைது செய்தனர். பொது இடத்தில் அநாகரிகமான செயலைச் செய்ததற்காக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294-ன் கீழ் நெகொண்டா காவல்துறையால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.