பாய்லர் விபத்து 4 தொழிலாளர் உயிரிழப்பு

ரேவாரி,

ஹரியானாவின் ரேவாரி மாவட்டம், தருஹேரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 16ம் தேதி பாய்லர் வெடித்தது.

இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள், ரோஹ்டாக் மற்றும் டில்லி சப்தர்ஜங் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காயம் அடைந்த தொழிலாளர்களில் உ.பி.,யை சேர்ந்த அஜய், 32, விஜய், 37, ராமு, 27, ராஜேஷ், 38 ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

காயம் அடைந்தவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து தொடர்பாக ஆலை ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சம்பவம் பற்றி அறிந்த முதல்வர் நாயப் சிங் சைனி துணை கலெக்டரை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.