ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எரிவாயு, மின்சாரம், டொலர் என்பன கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும், மரக்கறிகளின் விலையும் ஓரளவுக்கு குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்காலத்தில் தம்புள்ளை, மீகொட, வெலிசறை, வெயங்கொடை ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதுடன், 1 கிலோ 200 ரூபாவுக்கு கூட விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வருடம் புத்தாண்டை ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வகையில் கொண்டாடுவதாகவும், இதுவரை ஒரே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெறவில்லை என்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.