சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் தபால் விநியோகிப்பதற்கான விசேட சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொது விடுமுறை தினமான ஏப்ரல் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள தபால்ஃதுணை தபால் நிலையங்கள் மூலம் Cash-on-Delivery, வெளிநாட்டு கூரியர் சேவை மற்றும் பார்சல் விநியோகம் ஆகிய விசேட சேவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.