புழுதியாறு ஏற்று நீர் பாசனத் திட்ட புனரமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் புழுதியாறு குள ஏற்று நீர் பாசனதிட்ட புனரமைப்பு தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் குறித்த திட்ட புனரமைப்புக்கான அனுமதியை வடக்கு மாகாண சபையிடம் பெறுவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன்
பகுதியில் பயிர்ச் செய்கை தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டு, இப்பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வுகாணுதல் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.