குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம்

'பீஸ்ட், டாடா' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ். 'மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகர் தீபக் பரம்போல் ஆகிய இருவருக்கும் இன்று (ஏப்., 24) கேரள மாநிலம், குருவாயூரில் திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றது. அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. கேரள முறைப்படி நடந்த திருமண நிகழ்வில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது வளர்ந்து வரும் சில மலையாள நடிகைகள் சில படங்களில் நடித்து புகழ் பெற்றதுமே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள். அபர்ணா நடித்த 'பீஸ்ட், டாடா' இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடிய படங்கள். இருந்தாலும் தமிழில் அவர் அடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.