பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

பிரேசிலியா, தென்அமெரிக்க நாடான பிரேசிலில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக இந்த கனமழையால் … Read more

‘இந்திய பொருளாதாரம் வேகமாக வளருகிறது’ – நிதி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி,  2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் வளர்ச்சி விகிதம் உந்தப்படும் என்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில், “உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களால், உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள், வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும். பன்னாட்டு நிதியம், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியை முந்தைய கணிப்பை விட குறைத்துள்ளது. ஆனால், இந்திய பொருளாதார வளர்ச்சியை … Read more

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; மலேஷியாவிடம் தோல்வியடைந்த இந்தியா!

ஷா அலாம், ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவின் ஷா அலாம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் இந்தியா நேற்று நடைபெற்ற தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி மலேஷிய அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் இந்தியா மலேசியாவிடம் வீழ்ந்தது. எனினும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாரா ஷா வெற்றி பெற்றனர். மற்ற 3 ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர். முன்னதாக தென் … Read more

பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இளவரசர்: எந்த நாட்டில் தெரியுமா..?

லண்டன்,  இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என … Read more

போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அதிக விமானங்கள்

புதுடெல்லி,  உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிட்டு படைகளை குவித்து வரும் ரஷியாவால் உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளும் களமிறங்க திட்டமிட்டு உள்ளதால் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. இந்த பதற்றமான சூழலில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்கள் வெளியேறுமாறும், மற்றவர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, கல்வி மற்றும் … Read more

குளிர்கால ஒலிம்பிக்; பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ஆரிப்கான் ஏமாற்றம்!

பீஜிங்,  24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த ஒலிம்பிக்குக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற ஒரே இந்தியரான ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் முகமது ஆரிப்கான், ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் 45-வது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் அவர் நேற்று மற்றொரு பந்தயமான ஸ்லாலோம் பிரிவில் பங்கேற்றார். பனிப்பாதையில் உயரமான இடத்தில் இருந்து வழியில் நட்டப்பட்டுள்ள குச்சிகளை தட்டியபடி வேகமாக சறுக்கி செல்லும் இந்த போட்டியில்  31 வயதான ஆரிப்கான் … Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் சரிவு..!! உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா,  உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 75 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலியாகி உள்னனர். * உலகளவில் ஒரு வார கால தொற்று பாதிப்பு 19 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இறப்புகள் நிலையாக உள்ளன. * … Read more

கர்நாடகத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு கல்லூரிகள் இன்று திறப்பு

பெங்களூரு,  ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உயர்நிலை பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.  இந்த நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பி.யூ.சி. உள்பட டிகிரி கல்லூரிகள் இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் அமைதி-நல்லிணக்க கூட்டத்தை நடத்தியுள்ளனர்.  அதில் கலெக்டர்கள், கல்லூரிகளில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் … Read more

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. ஒரு நாள் தொடரை முழுமையாக வசப்படுத்திய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டுகிறது. இன்னும் … Read more

கனடா: மீனவர்களின் விசைப்படகு மூழ்கி விபத்து; 7 பேர் பலி, 14 பேர் மாயம்

மாட்ரிட், நேற்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக, நேற்று அதிகாலை காலை 5:24 மணியளவில் கலீசியா துறைமுகத்தைச் சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடிக் கப்பலில் இருந்து மாட்ரிட்டிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல்பகுதியில் அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசைப்படகு, இரண்டு உயிர்காக்கும் படகுகளைக் கண்டுபிடித்தது. அதில் … Read more