நேபாளத்தில் புதுமணத் தம்பதியுடன் சென்ற ஜீப் மலைப்பாங்கான சாலையில் சறுக்கி கவிழ்ந்து விபத்து.. 8 பேர் பலி.! <!– நேபாளத்தில் புதுமணத் தம்பதியுடன் சென்ற ஜீப் மலைப்பாங்கான … –>

நேபாளத்தில் உள்ள பியூதான் மாவட்டத்தில் புதுமணத் தம்பதியுடன் சென்ற ஜீப் ஒன்று, மலைப்பாங்கான சாலையில் சறுக்கி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மணமக்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். புதுமண தம்பதியையும் அவர்களது உறவினர்களையும் ஏற்றிக் கொண்டு லுங் பகுதியில் இருந்து கௌமுகி கிராமப்புற நகராட்சியின் லிபாங் நோக்கிச் சென்ற போது, ஜீப் சறுக்கி சுமார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்து நேரிட்டது. இதில் சம்பவ இடத்திலேயெ 6 பேர் உயிரிழந்ததாகவும் 2 … Read more

நீட் தேர்வில் இருந்து விலக்கு : பிப்.8ல் சட்டமன்ற சிறப்பு கூட்டம் – சபாநாயகர் அப்பாவு <!– நீட் தேர்வில் இருந்து விலக்கு : பிப்.8ல் சட்டமன்ற சிறப்பு… –>

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வரும் 8ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், மாணவர்களின் நலனுக்காகவே சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க … Read more

காட்டு யானையை மிரள வைத்து படம் எடுத்த டிக்டாக் பதிவாளருக்கு பலத்த கண்டனம் <!– காட்டு யானையை மிரள வைத்து படம் எடுத்த டிக்டாக் பதிவாளருக்… –>

இலங்கையில் காட்டு யானை ஒன்றை துன்புறுத்தும் டிக் டாக் பதிவாளரின் வீடியோ படக்காட்சி வைரலாகப் பரவி வருகிறது. இது நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பூர்ணா செனவிரதனே என்ற பெயரில் உள்ள பதிவாளர் தனித்த சாலையில் காரில் போகும் போது ஒரு காட்டு யானையை கண்டு தமது காரால் யானைய மிரட்டி பின்வாங்க வைக்கும் காட்சியைப் பதிவு செய்துள்ளார். விலங்குகள் நல அமைப்புகள் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்   Source link

செல்போன் பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி.. விரைந்து சென்று மீட்ட சிஐஎஸ்எப் வீரர்..! <!– செல்போன் பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி… –>

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமேடையின் விளிம்பில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த பயணியை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைவீரர் ஓடிச் சென்று மீட்ட காட்சி வெளியாகியுள்ளது. சதாரா மெட்ரோ நிலையத்தில் செல்போனைப் பார்த்துக்கொண்டே உலவிய பயணி நடைமேடையின் விளிம்பில் இருந்து கீழே விழுந்தார். எதிர்ப்புற நடைமேடையில் வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைவீரர் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்து அந்தப் பயணியைத் தூக்கி நடைமேடையில் ஏற்றிவிட்டார். மெட்ரோ ரயில் வருமுன் பயணியை விரைந்து மீட்ட இந்தக் காட்சியை … Read more

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம் <!– சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் நீ… –>

சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான கண்ணாம்மாள் என்பவர், தான் பணியாற்றிய காலத்திற்கு ஊதிய உயர்வு, ஊதிய பாக்கி தர மறுக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், மனுதாரரின் பணி வரன்முறைபடுத்தபடவில்லை என்றும், தவறுதலாக அவரது பெயர் ஆசிரியருக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வு பெற தகுதியில்லை என்றும் அரசு … Read more

சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய பயணிகள் பேருந்து – 10 பேர் பலி <!– சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கிய பயணிகள் பேருந்… –>

சோமாலியாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில் பயணிகள் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டதில் அதில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.  ஜூபாலண்ட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான kismayo-வை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியதாக அம்மாகாண ராணுவ கமாண்டர் ஏடன் தெரிவித்துள்ளார். Source link

216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு சமத்துவத்திற்கான சிலையை திறந்த பிரதமர்.! <!– 216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு சமத்துவத்திற்கான சிலை… –>

தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட 216 அடி உயர பிராம்மாண்ட ராமானுஜர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உள்ளதாக குறிப்பிட்டார். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் ‘சமத்துவத்திற்கான சிலை’ என்ற பெயரில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள பீடத்தின் … Read more

சடன் பிரேக் அடித்த லாரி மீது மோதிய அரசு பேருந்து -20க்கும் மேற்பட்டோர் படுகாயம் <!– சடன் பிரேக் அடித்த லாரி மீது மோதிய அரசு பேருந்து -20க்கும… –>

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி சடன் பிரேக் அடித்ததால்,லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாகர்கோவிலில் இருந்து சென்னை வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழையனூர் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது இரும்பு லோடு ஏற்றி முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி, போக்குவரத்து நெரிசல் காரணமாக சடன் பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பேருந்து ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தின் முன்பக்கம் … Read more

மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே காரணம்-தேவேந்திர பட்னாவிஸின் மனைவி குற்றச்சாட்டு <!– மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே கா… –>

மும்பையில் நடக்கும் 3 சதவீத விவாகரத்துக்கு மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதே காரணம் என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் (Devendra Fadnavis) மனைவி குற்றம்சாட்டியுள்ளார். குண்டும் குழியுமான சாலைகளில் பயணிப்பதால் பெரும் அவதிக்கு ஆளாவதாகத் தெரிவித்த அம்ருதா ஃபட்னாவில் (Amruta Fadnavis), போக்குவரத்து நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாததே 3 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்றார். இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த சிவ சேனா துணைத் தலைவர் பிரியங்கா சதுர்வேதி ((Priyanka … Read more

வேட்புமனு நிராகரிப்பு-வாக்குவாதம், சாலை மறியல் <!– வேட்புமனு நிராகரிப்பு-வாக்குவாதம், சாலை மறியல் –>

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, பல்வேறு காரணங்களால் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்றன.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பமனுத் தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி 23 வார்டில் அதிமுக நிர்வாகியான சரவணன் நதி என்பவரின் மனைவி தாரணி வேட்பு மனு தாக்கல் செய்தார். … Read more