மன்னன் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு ஒத்திகை.. வெயில் தாளாமல் 3 வீரர்கள் மயக்கம்..!

லண்டனில் மன்னன் சார்லஸின் பிறந்தநாளின் போது நடக்க உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையின் போது வெயில் தாங்காமல் வீரர்கள் 3 பேர் மயங்கிச் சரிந்தனர். வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள அணிவகுப்புக்கான இறுதி ஒத்திகையை இளவரசர் வில்லியம் நேரில் பார்வையிட்டார். அப்போது வெயிலை தாக்குப்பிடிக்க இயலாத ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டார். மயங்கிய 2 பேர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டனர். கடும் வெயிலில் ஒத்திகையில் பங்கேற்ற அனைவருக்கும் இளவரசர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் … Read more

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள “ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு” – ரயில்வே உத்தரவு

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையை பின்பற்ற ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஒடிசாவில் விபத்து நேரிட்ட பகனகா பஜார் ரயில் நிலையத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். அங்கிருந்த லாக் புத்தகம் மற்றும் சில கருவிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் நிலையங்களில் அமைந்துள்ள ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், லெவல் கிராசிங்களுக்கான தொலை தொடர்பு சாதனங்கள், சிக்னல் அமைப்புகள் ஆகியவை அடங்கிய ரிலே அறைகளுக்கு … Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு ஜி 20அமைச்சர்கள் மாநாடு..! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாட்டு அமைச்சர்கள் வாரணாசி வருகை

ஜி 20 அமைச்சர்கள் மாநாடு வாரணாசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் வாரணாசிக்கு வந்துள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாட உள்ளார். உலகில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை, கடன் நெருக்கடிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத சூழல் போன்ற பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.  … Read more

யம்மி ஓட்டலா வேண்டாம்ப்பா..! பூரான் பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த குடும்பம்..! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கம்

கடலூரில் உள்ள யம்மி செட்டி நாடு ஓட்டலில் வாங்கிய பிரியாணிக்குள் கிடந்த பூரானை சாப்பிட்டு விட்டதாக கூறி தந்தை ஒருவர் தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தட்டில் இருந்த பூரான் பிரியாணியுடன் மருத்துவமனைக்கு குடும்பமே வந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. கடலூர் யம்மி ஓட்டலில் பிரியாணி வாங்கிய பார்சலில் பூராண் இருந்ததாக புகார் தெரிவித்து பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த காண்டிராக்டர் குடும்பத்தினர் இவர்கள் தான்..! கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரச் சேர்ந்தவர் … Read more

அமெரிக்காவில் விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் தடம்புரண்டு விபத்து

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்குரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. வில்லியம்ஸ் நகருக்கு கிழக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும், சரக்கு ரயிலின் 23 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு ரயில் விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தடம் புரண்ட ரயிலின் உருக்குலைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. Source link

சென்னைக்குப் புறப்பட்ட இண்டிகோ விமான என்ஜினில் பழுது.. டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கம்..!

டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம் என்ஜின் பழுதானதால் டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஏர்பஸ் ஏ321 நியோ என்ற விமானம் 230 பயணிகளுடன் நேற்று இரவு 9.46க்குப் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இரவு 10.39 மணிக்கு மீண்டும் டெல்லியிலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.   Source link

பெண்ணிடம் 6 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற டவுசர் கொள்ளையர்கள்..!

மதுரை அலங்காநல்லூர் அருகே பெண் ஒருவரிடம் 6 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பாப்பாகுடி வாசன் நகர், தினமணிநகர், உள்ளிட்ட புறநகர் விரிவாக்க பகுதிகளில் அரை கால் டவுசர், பட்டாகத்தி , முகமூடி அணிந்தவாறு கொள்ளையர்கள் வீடு வீடாக நோட்டமிடும் காட்சிகள் சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராக்களை பார்த்ததும் டவுசர் கொள்ளையர்கள் அவற்றை உடைத்து சேதப்படுத்தி தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. Source link

ஃப்ரீ ஃபையர் கேம் விளையாடி தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.36 லட்சத்தை காலிசெய்த சிறுவன்..!

ஆன்லைன் விளையாட்டு மீதான மோகத்தால் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளான்… அம்பேர்பேட் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தனது தாத்தாவின் செல்போனில் ஃப்ரீ ஃபையர் கேமை இன்ஸ்டால் செய்து விளையாடியுள்ளான். கேமில் அடுத்தடுத்த லெவல் செல்வதற்கு ஸ்கில்ஸ் மற்றும் வெப்பனுக்காக சிறிதுசிறிதாக முதலில் ஆயிரத்து 500 ரூபாய் என தொடங்கி பத்தாயிரம் ரூபாய் வரை பணம் செலவழிக்க தொடங்கியுள்ளான்.இப்படி வீட்டுக்கே தெரியாமல் … Read more

காதல் தம்பதி வழிபட எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிகழ்ச்சிகள் ரத்து.. போலீசார் தீவிர விசாரணை..!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காதல் தம்பதி வழிபட எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரம்பட்டி கிராமத்தில் சில இளைஞர்கள் வேறு சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்திருப்பதை காரணம் காட்டி கோயிலுக்கு வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. காதல் தம்பதி போலீசாரை அணுகிய நிலையில், கோவில் நிர்வாகத்தினர் திருவிழாவையே ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. Source link

விபத்து நிகழ்ந்த ரயில் நிலையத்தை மூடி சீல் வைத்த சிபிஐ அதிகாரிகள்.. எந்த ரயிலும் நிற்கக்கூடாது என உத்தரவு..!

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ அதிகாரிகள், விபத்து நடைபெற்ற பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல் வைத்தனர். அங்கு எந்த ரயிலும் நிற்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில் நிலையத்தின் குறிப்பேடு உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் சிஸ்டம் சீல் வைக்கப்பட்டு ஊழியர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாலசோர் மாவட்டத்தில் அனைத்து ரயில் தடங்களும் சீரமைக்கப்பட்டதாகவும் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் … Read more