பிரச்னைகளுக்கு தீர்வுக்காணப்பட்டால் மட்டுமே ஆசிய போட்டிகளில் பங்கேற்போம் – மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்

பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுக்காணப்பட்டால் மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டிகளில் தாங்கள் பங்கேற்போம் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் நடைபெற்ற விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டத்தில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாய சங்கத்தினரிடம்  மத்திய அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை பற்றி வீராங்கனைகள் எடுத்துரைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாக்சி மாலிக், மன ரீதியாக தாங்கள் தினந்தோறும் … Read more

துண்டு போட்டு சீட்ட மட்டுமில்ல திருடனையும் பிடிப்போமுல்ல… கோவை போலீசார் கெத்துப்பா..!

கோவை கோனியம்மன் கோவிலில் திருடிவிட்டு, பேருந்தில் ஏறி மதுரை வழியாக தேனிக்குச் சென்ற திருடனை, அவனது தோளில் கிடந்த துண்டை அடையாளமாக வைத்து ,50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பின்தொடர்ந்து சென்று தனிப்படை போலீசார் மடக்கியுள்ளனர்.  சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள்…. அந்த வகையில், தோளில் போட்டிருந்த துண்டு ஒன்றை அடையாளமாக வைத்து கோயம்புத்தூர் தனிப்படை போலீசாரால் மடக்கிப்பிடிக்கப்பட்ட திருடன் சேகர் என்கிற சதீஷ் இவர் தான்… கோயம்புத்தூர் மாநகரின் காவல்தெய்வமாக போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் … Read more

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 2 பயணியர் விமானங்கள் மோதி விபத்து

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 2 பயணியர் விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தையடுத்து விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதை சிறிது நேரம் மூடப்பட்டது. இதனால் சில விமானங்களின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. பாங்காக் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் வலது இறக்கை, தாய்பே புறப்பட தயாராகிக் கொண்டிருந்த ஈவா ஏர் விமானத்தின் பின்புறம் மோதியது. இதில் தாய் ஏர்லைன்ஸ் விமானத்தின் வலது இறக்கையின் ஒரு பகுதி உடைந்ததாகக் கூறப்படுகிறது. டேக்சி வேயில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், … Read more

கல்லூரி மாணவியை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு முன்னாள் காதலன் எடுத்த வீபரீத முடிவு

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், கல்லூரி மாணவியை பட்டாக்கத்தியால் வெட்டிய முன்னாள் காதலன், தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக இருந்த விர்ஜின் ஜோஷுவாவும், கலைக்கல்லூரியில் படித்துவந்த டெனிஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக விர்ஜின் ஜோஷுவா உடன் பேசுவதை டெனிஷா நிறுத்திவிட்டதாக தெரிகிறது. அவரை தொடர்பு கொண்ட ஜோஷுவா, கடைசியாக ஒரு முறை தம்மை பார்க்க வருமாறும், அவ்வாறு வந்தால் தாங்கள் இருவரும் சேர்ந்து … Read more

விழுப்புரம் அருகே புதுச்சேரியைச் சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புதுச்சேரியைச் சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். புதுச்சேரியைச் சேர்ந்த அருண், கோர்காடு அன்பரசன் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலைமுயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. அவற்றில் ஒரு வழக்கு தொடர்பாக மயிலம் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களை செங்கமேடு பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த … Read more

மாலுமிகள் 22 பேரை கத்தி முனையில் சிறைபிடித்த அகதிகள்… ஹெலிகாப்டர்களில் வந்து மீட்ட பாதுகாப்பு படையினர்

ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட கும்பலால் சிறை பிடிக்கப்பட்ட துருக்கி நாட்டு சரக்கு கப்பலை இத்தாலி பாதுகாப்பு படையினர் அதிரடியாக மீட்டனர். சிரியா, ஆப்கான், ஈரான் நாடுகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 15 பேர் கும்பல், துருக்கியிலிருந்து பிரான்ஸ் சென்ற சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்டனர். நடுக்கடலில் அவர்களை மாலுமிகள் கவனித்த போது, கத்தி முனையில் சிறை பிடித்தனர். சிசிடிவி-யில் இதனை கவனித்த கேப்டன், எஞ்சின் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக்கொண்டு துருக்கிக்கு தகவல் … Read more

ஆண் நண்பருடன் ஏற்பட்ட தகராறால் விமான நிலையத்தில் பெண் விபரீத முயற்சி… பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்பு

ஐதராபாத் விமான நிலைய மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண் பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற பெண் பெங்களூரை சேர்ந்த சுவேதா என்பவர் ஆவார். ஐதராபாத்தில் இருந்து தமது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு திரும்புவதற்காக ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது, அவரது ஆண் நண்பருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலையத்தின் 2-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றதார். அங்கு வந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அந்த பெண்ணை … Read more

துருக்கி ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து.. 5 பேர் உயிரிழப்பு

துருக்கி அரசுக்குச் சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ராக்கெட் ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டுவந்த தொழிற்சாலையில், வல்லுனர்கள் டைனமைட் வெடிமருந்தை வைத்து பரிசோதனை மேற்கொண்டபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெடி விபத்தினால் ஏற்பட்ட அதிர்வுகளால் அருகே உள்ள வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் சிதறி உடைந்தன. காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Source link

ஒடிசா ரயில் விபத்து நேரிட்ட பஹநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல் வைத்த சிபிஐ அதிகாரிகள்..!

ஒடிசாவில் விபத்து நேரிட்ட பகுதியான பஹநாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், சிக்னல் கொடுக்கும் பேனலுக்கு சீல் வைத்து லாக் புத்தகத்தை பறிமுதல் செய்துள்ளனர். அந்த ரயில் நிலையம் முழுமையாக சி.பி.ஐ.யின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. விசாரணை தொடரும் நிலையில், அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை அங்கு ரயில்கள் நின்று செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே, … Read more

சாவிகளை கொடுக்க சொல்லுங்க.. ஆணையிட்ட எம்.எல்.ஏவிடம் அதிரடி காட்டிய டி.எஸ்.பி..! மண் கடத்தலுக்கு செக் வைத்தார்

பட்டுக்கோட்டை அருகே சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்டவர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த நிலையில், வண்டிகளை விடுவிக்க கூறிய எம்.எல் ஏ அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய டி.எஸ்.பி பாலாஜியின் ஆடியோ வெளியாகி உள்ளது. பட்டுக்கோட்டை அடுத்த திட்டக்குடி கிராமத்தில் காலாவதியான ரசீதுகளை பயன்படுத்தி சிலர் மண் கடத்தலில் ஈடுபடுவதாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த இடத்தில் இருந்த டிராக்டர் மற்றும் ஜேசிபியை பறிமுதல் செய்து மண்கடத்தலை தடுத்து நிறுத்தினர். … Read more