ஆசிரியர் இடமாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களாயின், அவ்வாறான இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்படும் – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாரியளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே … Read more

கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐயோரா பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தை இலங்கை முன்னெடுப்பு

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்குழுவின் மூன்றாவது கூட்டம் இலங்கையின் தலைமையில் 2023 மார்ச் 20ஆந் திகதி 23 ஐயோரா உறுப்பு நாடுகளின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது. ஐயோரா செயலகத்தின் பொதுச்செயலாளர் சல்மான் அல் ஃபரிசி மற்றும் செயலகத்தின் பிரதிநிதிகள் மொரிஷியஸில் உள்ள ஐயோரா செயலகத்தில் இருந்து இணையவழி மெய்நிகர் முறையில் பங்கேற்றனர். கூட்டத்தை ஆரம்பித்து வைத்த வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் … Read more

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பண்டாரவளை, பூனாகல, கம்பரகலை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (19) மாலை கம்பரகலை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கு வசிக்கும் 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை … Read more

டொலர் தொடர்பிலான நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

நாட்டின் அத்தியாவசிய துறைகளுக்குத் தேவையான வெளிநாட்டு நாணயம் கையிருப்பில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வார காலப் பகுதியில் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு அமைவாக சில மாற்றங்களை எடுத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் அமெரிக்க டொலர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக சிலர் குற்றஞ்சாட்ட முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் டொலர் தொடர்பில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இவ்வாரம் மிகவும் முக்கியமானதாக அமையும். சர்வதேச நாணய நிதியம் … Read more

தொழிற்சங்கங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துகின்றன..

அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் போது தொழிற்சங்கங்கள் போராடி நாட்டை பின்னுக்கு இழுக்க முயற்சிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டினார். தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவே விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிற்சங்கங்களின் தேவையற்ற வேலைநிறுத்தம் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தடைபடலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கம்பஹா, சீதுவ, கிழக்கு மூகலங்கமுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடத்தை இன்று (19) மக்களிடம் கையளிக்கும் … Read more

ஜனாதிபதி தலைமையில் “சதராவ தீபனீ” கௌரவிப்பு நிகழ்வு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்தியலுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட “சதராவ தீபனீ” என்ற கௌரவிப்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (16) நடைபெற்றது. கலைப் படைப்புகளுக்குப் பங்களித்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியெல்ல, சிரில் விக்கிரமகே ஆகிய சிரேஷ்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.   பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, குமார … Read more

தொடர் தோல்வியின் பின்னர், வெற்றி பெற்ற றோயல் கிரிக்கெட் அணியை போன்று இலங்கையையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வருவோம்! – ஜனாதிபதி

அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து வந்த கொழும்பு றோயல் கல்லூரி கிரிக்கட் அணியின் சரியான தலைமைத்துவமே இறுதியில் வெற்றிக்கு வழிவகுத்தது எனவும், றோயல் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவரைப் போன்று தோல்வியடைந்த நாட்டை வெற்றிப் பாதைக்கு உயர்த்துவதே எமது முயற்சி எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் பற்றாக்குறை உள்ளிட்ட பல கடுமையான நெருக்கடிகளுடனே நாட்டைப் பொறுப்பேற்றதையும், பல போட்டிகளில் தோல்வியடைந்த றோயல் அணியைப் போன்ற நிலையே … Read more

“நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா (18.03.2023) கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் … Read more

இலங்கையில் சிலபிரதேசங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு

இலங்கையில் சிலபிரதேசங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. திருகோணமலை -கோமரங்கடவல மற்றும் கிரிந்த ஆகிய பிரதேசங்களில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசியகட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது இரண்டு தசம் ஆறு றிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.கோமரங்கடவல பிரதேசத்தில் நேற்று அதிகாலை நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது 3 றிக்டராக  பதிவாகியுள்ளதாக தேசியகட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி உடுகம்பலையில் தமது வீடு எரிந்து நாசமானது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்த முறைப்பாட்டின் விசாரணை தாமதம் ஆனமை குறித்து கவலை தெரிவித்து நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 16ஆம் திகதி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், வீடு எரிப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுவதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு … Read more