வீரபாண்டியபுரம் விமர்சனம்: `நான் மகான் அல்ல', `ஜீவா' எடுத்த சுசீந்திரனுக்கு என்னாச்சு?

கணக்கன்பட்டிக்கும், நெய்க்காரப்பட்டிக்கும் இடையே அரசியல் தகராறில் கொலைகள் தொடர்கின்றன. அதில் ஒரு சிறுமி காணாமல் போவதில் ஆரம்பிக்கும் கதை அப்படியே நூல் பிடித்து ஜெய், மீனாக்‌ஷி கோவிந்தராஜன் கோயில் திருமணத்தில் வந்து முடிகிறது. ஆனால், திருமணம் செய்யாமல், கிரிக்கெட் வீரர் தோனி போல “But I had other ideas” என ஜெய்க்கு வேறு சில யோசனைகள் வருகின்றன. மீனாக்‌ஷியின் தந்தையிடமே சென்று மீனாக்ஷியை ஒப்படைக்கிறார். ஒப்படைத்தால் மட்டும் வெத்தலை பாக்கு வைத்து பாராட்டவா போகிறார்கள் என்பது … Read more

மூட்டை நிறைய சில்லறை…“ஒரு சுஸூகி ஸ்கூட்டர் குடுங்க!'' அஸாமில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்

இருசக்கர வாகனம் வாங்குவது என்பது பெரும்பாலான இந்தியர்களின் கனவு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் இருசக்கர வாகனத்தோடு நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். சின்ன வயதில் டிவிஎஸ் 50 -ன் கம்பியைப் பற்றியவாறு அப்பாவோடு பயணித்தது தொடங்கி தன் காதலியைப் பின் இருக்கையில் அமரச் செய்து ஒட்டிச் செல்வது வரை… சினிமா காட்சிகள் யோசித்தால்கூட ஒரு இருசக்கர வாகனம் இன்றி காட்சி இருக்காது. அப்படியான இருசக்கர வாகனத்தை வாங்குவதற்கு நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்? அஸாம் மாநிலம் பர்பேட்டாவைச் சேர்ந்த … Read more

`கண்ணே கலைமானே' 40ஆவது ஆண்டு காணும் மூன்றாம் பிறை; சிறப்பு போட்டோ ஆல்பம்!

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி 1982 இல் வெளியாகியது ‘மூன்றாம் பிறை ‘. இத்திரைப்படம் வெளியாகி, 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும் அதற்கு ஈடாக கமஹாசனும் தங்களுடைய உச்ச நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள். இசை இளையராஜா. 5 பாடல்கள் இந்தப் படத்தில். பலரின் நினைவுகளில் நீங்காது நிற்கும் ‘கண்ணே கலைமானே’ பாடல் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல். இந்தியச் சினிமாவின் மிகச் சிறந்த … Read more

`500 புத்தகங்கள் வாங்கணும்' – இயக்குநர் வசந்தபாலன் #ChennaiBookFair

“ஒரு 500 புக் இருக்கு… 5 மட்டும் எப்படி சொல்ல முடியும்” என ஆரம்பிக்கும் போதே உற்சாகமாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களின் இயக்குநர். “அரிதான புத்தகங்கள் தான் என்னுடைய முதல் சாய்ஸ் ஆக இருக்கும். வழக்கமா புத்தகக் கடைகளில் கிடைக்காத புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும். அப்படியான அரிதான புத்தகங்களைத் தேடி தேடி வாங்குவேன். காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் ஆரம்பக்கால புத்தக கண்காட்சிகளில் இருந்தே … Read more

சென்னை: வழக்கம்போல் மந்தம்… காத்தாடும் வாக்குப்பதிவு மையங்கள்! – 1 மணி நிலவரம் என்ன?!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக, இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட 200 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 5,794 வாக்கு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 27,800-க்கும் அதிகமான அதிகாரிகளும், 18,000 அதிகமான காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். வாக்குப்பதிவு மையம் மொத்தமுள்ள 5,794 வாக்குச்சாவடிகளில், 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை … Read more

விற்பனைக்கு வந்த `புஷ்பா' சேலை; குஜராத் நபரின் ட்ரெண்டி ஐடியா!

நீலாம்பரி சேலை, ஓவியா ஹேர்கட் என பிரபலங்களின் உடைகளையும், ஆபரணங்களையும் தேடித் தேடிப் பின்பற்றுவதெற்கென ஒரு தனிக் கூட்டமே உண்டு என சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இடம் பிடித்திருக்கிறது `புஷ்பா சேலை’. புஷ்பா `ஊ சொல்றியா’ சர்ச்சை: இந்த இலக்கணங்களைத் தாண்டி `புஷ்பா’வில் மட்டும் புதிதாக என்ன இருக்கிறது? `புஷ்பா’ படத்தில் அதிரடி நாயகனாக அல்லு அர்ஜுன் கலக்கி இருப்பார். வில்லனாக ஃபகத் பாசில், ராஷ்மிகாவின் நடிப்பு, வைரலான சமந்தா நடனமாடிய பாடல் என ஒரு … Read more

நெல்லை: ஆர்வத்துடன் வாக்களித்த 101 வயது முதியவர்! – அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்த பெருமிதம்!

நெல்லை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் பல சுவாரஸ்யங்கள் நடந்து வருகின்றன. புதிதாக வாக்கு செலுத்தும் இளம் வாக்காளர்கள் ஒருபக்கம் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில், மூத்த வாக்காளர்களும் அவர்களுக்கு இணையாக உற்சாகமாக வாக்குச் சாவடிக்கு வருகிறார்கள். 80 வயது மூதாட்டி பீமா பீவி அந்த வகையில், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 101 வயது முதியவர் முண்டன் என்பவர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தார். தனக்கு 101 வயது ஆவதாக அவர் தெரிவித்த நிலையில், அவரது … Read more

Arabic Kuthu: சமந்தாவின் வீடியோவுக்கு பூஜா ஹெக்டே கமென்ட்; இரண்டு வருடப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் `அரபிக் குத்து’ பாடல் கடந்த பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று வெளியானது. இப்பாடல் வெளியாகி நான்கு நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட் அடித்து வருகிறது. இப்பாடலுக்கு பலரும் நடனமாடி தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தாவும் இந்த ‘அரபிக் குத்து’ பாடலுக்கு விமான நிலையத்திலிருந்து நடமாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா, பூஜா ஹெக்டே … Read more

`வாக்காளர்களுக்கு பணம்; தங்கநகை, கொலுசுக்கான கூப்பன் விநியோகம்!' – சாலை மறியல் செய்த சமூக ஆர்வலர்கள்

இராசிபுரம் நகராட்சியின் 27 வார்டுகளிலும் இருபெரும் திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று பணத்தை கொடுத்து வாக்கு கேட்டு கொண்டு வருவதாக கூறி, சமூக ஆர்வலர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கூப்பன் “கரூர் எஸ்.பி, திமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார்!” – குற்றம்சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. தமிழகம் முழுக்க இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், … Read more

மாற்றி யோசித்தால் அற்புதங்கள் விளையலாம் – கோப்பர்நிகஸ் வாழ்வு நமக்குக் கற்றுத்தரும் 6 பாடங்கள்!

1. அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் இதற்குமேல் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்ற எண்ணம் எந்த வயதிலும் வரக்கூடாது. பல்துறை வித்தகராக இருப்பது பயனளிக்கக்கூடிய ஒன்று. கோப்பர்நிகஸ் ஒரு கணிதவியலாளர், வானியலாளர், சட்ட நிபுணர், வழக்கறிஞர், நான்கு மொழிகளில் வெகு சிறப்பாக அறிந்தவர், அரசு தூதர், பொருளியலாளர். போதுமா?! 2. பிரபஞ்சம் நம்மைச் சுற்றியது அல்ல நம்மில் பலரும் எப்போதும் நம்மை மையமாக வைத்துதான் சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். ஆனால் அப்படி நடந்து கொண்டால் தனித்து விடப்படுவோம். கோப்பர்நிகஸ் வானியலில் … Read more